செய்தி: இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://youtu.be/nIJeXLXPsHA

“பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளய பறிகொடுத்துட்டு நிக்கறன்யா” ன்னு நம்ம எங்கயாவது ஒரு துக்க நிகழ்வுல கேட்டிருப்போம்…. அப்படி, இப்ப இறந்து போன யானையோட அம்மா அழுகணும்னா, “இருபத்து ரெண்டு மாசம் பெத்த புள்ளய பறிகொடுத்துட்டு நிக்கிறன்பா”ன்னு தான் அழும். ஆமாம், ஒரு யானைய பெத்து எடுக்க தாய் யானைக்கு 22 மாசம் ஆகும்.
“யானைத்தீனி திங்கறான்பா”ன்னு நம்ம யாரையாவது சொல்ல கேட்டிருப்போம். ஒரு யானை ஒரு நாளைக்கு சுமாரா 250 கிலோ உணவ சாப்பிடுமாம். அவ்வளவு உணவும் செரிமானம் ஆகணும்னா அது சுமார் 45 கிலோமீட்டர் நடக்கும்.போற வழியிலயும் அது இஷ்டத்துக்கு சாப்பிடும்.
ஒரு நாள் யானையின் சாணம் மட்டுமே சுமார் 100 கிலோவுக்கும் மேல். இதுல பலத்தரப்பட்ட பழங்கள், மரங்களின் விதைய யானை யாருக்கும் தெரியாமல் விதைக்குது. தன் வாழ்நாள் வரை இப்படி சுமார் 20 லட்சம் மரங்கள, ஒரே ஒரு யானை உருவாக்குது. சொல்லப்போனா ஒரு காட்டை ஒரு யானை உருவாக்குது.

இதுதான் யானை மனுசங்களான நமக்கு அளிக்கும் ஆசி, வரம்….இத மனுசங்க உணரணும். நாமெல்லாம் விலங்கினங்களுக்கு ரொம்பவும் கடமைப்பட்டிருக்கோம்.
ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோமீட்டர் நடக்க முடியிற யானையால, ஒரு மனுசனவிட ரெண்டு பங்கு வேகமா ஓட முடியும். இவ்வளவு தூரம் நடந்துட்டு, எவ்வளவு நேரம் யானை தூங்கும்னு நினைக்கிறீங்க. அதிக பட்சம் ரெண்டு மணி நேரம். ஆச்சரியமா இருக்கா?. ஆமா, யானை ஒரு அதிசயப்பிறவிதான்.
தன்னோட காதுகள வேகமா அடிச்சுதான் தான் சந்தோசமா இருக்குன்னு காண்பிக்குமாம். வாலையும் ஆட்டிக்கிட்டு இருக்கும். மனுசங்கள மாதிரியே யானைகள் அழுகும். தன்னோட குழந்தைகள பாசங்காட்டி வளக்கறதுல யானை, மனுசனுக்கு சமம்.

பொறந்த சில மணி நேரங்கள்ல ஒரு குட்டி யானையால நிக்க முடியும். தாய் எழுப்புற சத்தத்தை, 1.5 கிலோமீட்டர் தொலைவு வரை கேக்கவும் முடியும்.
கோயில்கள்ல சங்கிலியால கட்டி வைக்கிற மாதிரி ஒரு கொடுமை உண்டா?. ஒரு நாளைக்கு 40 கிலோமீட்டர் வரை நடக்கும் யானைய, ஒரே எடத்துல கட்டி வச்சு, அதுக்கு அதே 250 கிலோ அளவிலான உணவக்கொடுத்தா..?அதுவும் வெல்லம், வாழைப்பழம்னு கொடுத்தா அதுக்கு சுகர்/நீரிழிவு நோய் வராம, வேற என்ன வரும்?.

யானைகள் மனுசங்களுக்கு ஊருக்குள்ள வந்து கொடுக்குறது தொந்தரவு இல்ல. பழி வாங்குதுங்க…..காட்டுக்குள்ள நீங்க குடிச்சிட்டு போட்ட மது பாட்டில்கள், அதனோட கால்கள எத்தன தடவ பதம் பாத்திருக்கும். நடக்கவே முடியாம ஒரு மரத்துகிட்ட சாஞ்சி நின்னு செத்துப்போன யானைகளோட குடும்பம், உங்கள கும்பிடுமா என்ன…..துவைச்சு எடுக்கும்….
பாகன் ஒரு யானையைப்பழக எடுக்குற முயற்சி அசாதாராணமானது. தன் உயிரயும் பணையம் வச்சு சில உத்திகள அதுக்கு பழக்குவாங்க. அந்த அளவுக்கு அதன் மேல பாசமாவும் இருப்பாங்க. அந்த யானைகளும் பாகன் மேல அவ்வளவு பாசமா இருக்கும். பாகன எசமானனா பாக்குறத விட, ஒரு குடும்ப உறுப்பினராதான் பாக்கும், யானை. அப்படி பாசமா இருக்க யானை, சில நேரம் தன் பாகனை தூக்கி வீசி கொல்லுது. அதுக்கான காரணம் நமக்கு தெரியாது, ஆனா அதுக்கு கண்டிப்பா தெரியும்.

மனுசன் யானைய தன் கைக்குள்ள அடக்குற வித்தைய கத்துக்கிட்டான்னு நினைக்கிறான் . ஆனா யானை அதுக்கெல்லாம் அப்பாற்பட்டதுங்கிறதுனு புரிஞ்சிக்குற அளவுக்கு, அவன் மனம் இன்னும் பக்குவப்படல.
Super Soundar. Nice article. Recently saw a video where the elephant shaking her head for the questions her trainer asked with a sound.
LikeLiked by 1 person
Thank you
LikeLike
Yet another worst incident. We, the human, deplete each and everything for our own benefit. We shall be punished for these brutal incidents. The world will be recreated.
LikeLiked by 1 person